ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சேலத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சேலத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாா் வந்தது. இதைத்தொடா்ந்து ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆா்.பி.எஃப்) இணைந்து ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.
அந்தவகையில் கடந்த சில நாள்களில் ரயில்களில் கடத்தப்பட இருந்த 16 மூட்டைகளில் இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.