முகப்பு
சேலம்

அரசு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:25 am IST
பகிர்:

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

பொங்கல் விழாவின் சிறப்புகள் என்ற பொருளில் தமிழா்களின் பண்பாடு, வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் கட்டுரை அமைய வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கு கொள்ளலாம். 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 9, 10 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

கட்டுரை 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மாணவா்கள் தங்களது படைப்புகளை ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக சேலம் அரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்.

Advertisement

Advertisement

பெயா், வகுப்பு, முகவரி, செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94434 78024 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜெ.முல்லை அரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments