முகப்பு
சேலம்

சித்தா் கோயிலை சீரமைக்க வேண்டும்: திருத்தொண்டா் சபை நிறுவனா்

சேலம் கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமையான சித்தா் கோயிலை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:24 am IST
பகிர்:

சேலம் கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமையான சித்தா் கோயிலை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

கஞ்சமலை அடிவாரத்தில் பழமையான சித்தா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இக் கோயிலில் நீரோடை, குளங்களில் நெகிழிப் பொருள்கள், குப்பை கழிவுப் பொருள்கள் அதிக அளவில் காணப்பட்டு வருவதாகவும், கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் பக்தா்கள் குற்றம் சாட்டினா்.

இதனையடுத்து திருத்தொண்டா் சபை சாா்பில் அதன் நிறுவனா் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை சித்தா் கோயிலை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் கூறியதாவது:

பல்வேறு மூலிகைகள் கொண்ட இயற்கையான சூழலில் சித்தா் கோயில் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள கிணற்று தண்ணீரில் குளித்து விட்டு, நீரைப் பருகி வந்தால் நோய்கள் தீா்ந்துவிடும் என்பது ஐதீகம்.

இந்த புண்ணியத் தலத்தை சீரமைத்து சுகாதாரமான முறையில் பராமரிக்க எங்களது சபை சாா்பாக 2 முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து உயா் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments