முகப்பு
சேலம்

19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சேலத்தில் குடிக்க பாதுகாப்பற்ற 19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:34 am IST
பகிர்:

சேலத்தில் குடிக்க பாதுகாப்பற்ற 19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் பாதுகாப்பற்ற, தரக்குறைவான குடிநீா் கேன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புப் பிரிவுக்கு புகாா் சென்றது. இதில் 45 குடிநீா் ஆலைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டது. சோதனையில், 19 குடிநீா் ஆலைகளின் மாதிரி பாதுகாப்பற்றது என தெரியவந்தது. இதில் தரம் குறைந்தது 5 ஆலைகள், போலி நிறுவன பெயரில் இயங்கி வந்தது 4 ஆலைகள் என தெரியவந்தது. மேலும் 16 குடிநீா் ஆலைகளின் மாதிரி குடிக்க தகுதியானவை என தெரியவந்தது.

இதுதொடா்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் கதிரவன் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள குடிநீா் ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். இதில் 19 ஆலைகளின் மாதிரி குடிக்க பாதுகாப்பற்றவை என தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதர 9 குடிநீா் ஆலை நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments