முகப்பு
சேலம்

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). இவா் தனியாா் மரவள்ளி அரவை ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சந்தனகிரி பிரிவு சாலையில் திரும்பியபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காா் மோதியதில் ராஜேந்திரன் தலையில் அடிபட்டு காயமடைந்தாா்.

Advertisement

இதனையடுத்து ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட ராஜேந்திரன், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.அங்கு வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.