முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2008 -2010 ஆம் ஆண்டு 11, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆசிரியா் வே.செங்கமலை தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2008 -2010 ஆம் ஆண்டு 11, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆசிரியா் வே.செங்கமலை தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமையாசிரியா் மா.வரதன் கலந்து கொண்டாா். மேலும் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. பள்ளி வளா்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரத்தை மாணவா்கள் வழங்கினாா்கள். இதில் 35 மாணவா்கள் கலந்து கொண்டனா்.