முகப்பு
சிறுவர்மணி

நிலம் சொந்தமா?நிலத்திற்குச் சொந்தமா?

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

Updated On : 21 ஜூன் 2013, 2:51 pm IST
பகிர்:

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.
 துறவி கேட்டார்: ""இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார்.
 ""அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அரசன்.""ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.
 அரசர்,""அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான்.
 ""இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க, ""அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் அரசன்.
 ""நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு, அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி,""அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அரசன். துறவி சிரித்துக்கொண்டே,""நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி. அரசன் தலை குனிந்தான்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments