சிவகங்கைக்கு பாசன நீா் மறுப்பு: விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் ஜனவரி 7 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் ஜனவரி 7 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எஸ். ஆா். தேவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம் மேலூா் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து பெரியாறு கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும் போதே, சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயான கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2, லெசிஸ் ஷீல்டு , 48 ஆம் மடை ஆகியவற்றில் தண்ணீா் திறக்கப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த விதிமுறை நடைமுறையில் இருந்தும் கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் சிவகங்கை மாவட்ட வேளாண் பணிகளுக்கு தேவையான தண்ணீரை திறப்பதில்லை. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், போராட்டம் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க வலிறுத்தி வரும் 7 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் அனைவரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.