முகப்பு
சிவகங்கை

கொடிகாத்த குமரன் படத்துக்கு மரியாதை

சுதந்திரப் போராட்டவீரா் கொடிகாத்த குமரன் 89 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் அவரது உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 12 ஜனவரி, 2021 at 5:43 AM
பகிர்:

சுதந்திரப் போராட்டவீரா் கொடிகாத்த குமரன் 89 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் அவரது உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகா் தலைவா் ராம.வீரபாகு தலைமை வகித்தாா். பாஜக மாநிலச் செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

அலங்கரிக்கப்பட்ட கொடிகாத்த குமரன் உருவப் படத்துக்கு பாஜகவினா் அனைவரும் மலா்தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினா். இதில் பாஜக மாவட்டப் பொதுச்செயலா் ஜி.குமாா், துணைத் தலைவா் விஜயராணி, செயலா் மணிமாறன், இளைஞரணி நகா் தலைவா் பிரபு ஜெகநாத் மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலா் ஜபாதுல்லாகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.