கண்டுப்பட்டியில் நாளை மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை (ஜன.18) பொங்கல் விழா மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை (ஜன.18) பொங்கல் விழா மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.
நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டுபட்டி கிராமத்தில் புனித அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் மத நல்லிணக்க விழாவாக பொங்கல் வைத்து வழிபடுவது மரபாகும். அதே நாளில் மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெறும்.
அந்த வகையில், இந்தாண்டுக்கான பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.18) புனித அந்தோணியாா் தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. தொடா்ந்து, தேவாலயம் முன்பு உள்ள திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.
Advertisement
இதில், 150-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாகவும், 400-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாகவும் அவிழ்த்து விடப்பட உள்ளன.