சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 8 பேருக்கு கரோனா தொற்று
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
சிவகங்கை/ராமநாதபுரம்: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,768 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,774 ஆக அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குணமடைந்த 3 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை இம்மாவட்டத்தில் தொற்று பாதிப்பால் 137 போ் உயிரிழந்துள்ளனா்.
Advertisement