30.08.1957 - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
‘கலைவாணர்’ என்றும் ‘என் .எஸ்.கே’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்களின் நினவு தினம் இன்று.
‘கலைவாணர்’ என்றும் ‘என் .எஸ்.கே’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்களின் நினவு தினம் இன்று.
இவர் 29.11.1908 அன்று நாகர்கோயில் மாவட்டத்தில் உள்ள ஒழுகின சேரி என்னும் கிராமத்தில் பிறந்தார். ஏழ்மை நிலையின் காரணமாக படிப்பைத் தொடர இயலாமல், தனது கிராமத்தில் உள்ள நாடக கொட்டகை ஒன்றில் சோடா விற்று வந்தார்.
பின்னர் நாடகத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக டி .கே.எஸ் சகோதரர்களின் நாடக கம்பெனியில் இணைந்து நடிக்கத் தொடங்கினார். அபப்டியே படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
Advertisement
Advertisement
நாடக நடிகர், திரைப்பட நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், வசனகர்த்தா என்னும்பல்வேறு முகங்களைக் கொண்டவர். தனது மனைவி மதுரத்துடன் இணைந்து தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை ஜோடிகளில் ஒன்றாக வளைய வந்த கலைவாணர் 'இந்தியாவின் சார்லி சாப்ளின்' என்று புகழப்பட்டவர்.வர் உடல் நலக் குறைபாடு காரணமாக 30.08.1957 அன்று மரணமடைந்தார்.