கவிதைமணி

நிழல் தேடி:   பூ. சுப்ரமணியன்,

கவிதைமணி

நிழல் 
நின்று ஆடிப்பாடி
அடுக்குமொழியில்  
பேசியதையெல்லாம் 
நிஜம் என்று எண்ணி 
தமிழக பாமர மக்கள்
தங்கள் ஓட்டுக்களை
துட்டுக்கு 
வாரி வழங்கி விட்டு 
வாழ வழியில்லாமல்
நிஜத்தைத் தேடாமல் 
நிழலைத் தேடி தேடி 
அலைகிறார்கள் !

நாம் காலையில்
நிழலைத் தேடினால் 
நிழல் நம் முன்னே
வந்து வணங்குகிறது !

தேர்தலின்போது 
நம்மையெல்லாம் 
அரசியல்வாதிகள்
வணங்குவதைப் போல. 

நாம் பிற்பகலில் 
நிழலைத் தேடினால் 
நிழல் நிற்காமல் நம்  
பின்னே தொடர்கிறது !

தேர்தல் நாளன்று
தம்மோட ஓட்டுக்காக. 
நம் பின்னே வரும்
அரசியல்வாதிகள் போல. 

நாம் இரவில் ...
நிழலைத் தேடினால் 
நிழல் இருக்கும் இடம்
தெரியாமல் 
மறைந்து விடுகிறது !

வெற்றி பெற்ற பிறகு
தொகுதிப் பக்கமே 
தலைகாட்டாத  
அரசியல்வாதிகள் போல !                                       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT