கவிதைமணி

ஆறோடும் நீரோடும்; கவிஞர். கோவிந்தராஜன் பாலு

கவிதைமணி

சீரோடும் சிறப்போடும் சிறந்த வாழ்க்கை 
   சிதறித்தான் போகிறதே சீர்கெட் டுத்தான்.
நீரோடும் நெல்லோடும் நிறைந்த பூமி 
   நீரின்றி வறண்டுத்தான் நெஞ்சம் வாடி 
தேரோடும் தெருவினிலே தெம்மாங் கில்லை.
   தெய்வீகப் பாடலுந்தான் தேனாய் இல்லை.
ஊரோடும் உறவோடும் ஒன்றாய்ப் பேச
   உன்னதமாய் விழாக்களுமே ஒன்றும் இல்லை.

வயலெல்லாம் வற்றிப்போய் வளமை இல்லை.
   வரப்பினிலே புற்களுமே வளர வில்லை.
உயர்வான எண்ணங்கள் உடைந்து போக
   உணவுக்குக் கையேந்தி உழவன் வாட
துயரங்கள் தீர்ந்துவிட துளிகள் வீழ 
  தொடர்மழைதான் பெய்யட்டும் துன்பம் போக்க
இயல்பான விவசாயம் என்றும் வேண்டும் 
  இனிதாகப் போற்றிடுவோம் இயற்கை யையே.! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT