கவிதைமணி

பிஞ்சு மனங்களும்  செல்ல மழையும் :  கே.நடராஜன்

கவிதைமணி

என் பிஞ்சு கைகளை ஆட்டி  கொஞ்சும் 
மழலையில் நான் சொல்லிவிடுவேன் என்ன 
வேண்டும் எனக்கு என்று !
எந்த மொழி பேசினாலும்  என் மழலை 
மொழி புரியனுமே    என் அம்மாவுக்கும் 

அப்பாவுக்கும் !
என் மழலை கேட்டு அம்மா  அப்பா கொட்டும் 
செல்ல மழையில்  நனையனும் நான் எப்போதும் !

என் மழலை வயதில் உங்க செல்ல மழை 
மட்டுமே  வேண்டும் எனக்கு அம்மா .... அது ஒரு 
இனிய தூறல் மழை ! பாசத்தின் சாரல் மழை !

இடி  மழை  எனக்கு வேண்டவே வேண்டாமே  
இந்த பிஞ்சு வயதில் ...தாங்க முடியுமா நான் 
ஒரு இடி முழக்கத்தை இந்த வயதில் ?

புரிஞ்சுக்கணும் ஒரு பிஞ்சின் மனதை நீங்க 
செல்ல மழை  பெய்ய வேண்டிய நேரத்தில் 
தப்பாமல் பெய்ய வேண்டும் செல்ல மழை !

உங்க மனசு நான் புரிஞ்சு நடக்கும் காலம்  
மலரும் நேரம்.... சொல்லாமல் 
கொள்ளாமல்  ஓய்ந்து விடும் செல்ல மழை !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT