நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்


பாடல் - 9

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி,
ஏதம் சாரா, எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.

எம்பெருமானின் திருவடிகளை ஒவ்வொரு நாளும் வணங்கினால் நோய்கள் தீரும், பாவங்கள் நெருங்காது, இனி எனக்கு என்ன குறை? (ஏதுமில்லை.) வேதங்களை ஓதுகின்றோர் விரும்புகின்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஆதிப் பெருமான், அவரை அடைந்தவர்களுக்கு அல்லல்கள் ஏதும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளில் பலத்த மழை

மணமேல்குடியில் 111.8 மிமீ மழை

3 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை -புதுகை ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ராஜஸ்தானை கட்டுப்படுத்தியது பஞ்சாப்

SCROLL FOR NEXT