நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 10

செ.குளோரியான்


பாடல் 10

மங்க ஒட்டு உன் மாமாயை, திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே, யானே நீ ஆகி என்னை அளித்தானே,
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம், ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி, மான ஆங்கார மனங்களே.

திருமாலிருஞ்சோலையிலே எழுந்தருளியிருக்கும் எங்கள் தலைவனே, நானாக ஆகி என்னைக் காத்தவனே, கிளர்கின்ற ஐந்து புலன்கள், ஐந்து பொறிகள், கருமேந்திரியங்கள் ஐந்து, பூதங்கள் ஐந்து, இங்கே இந்த உயிரோடு கலந்த மூலப்பிரக்ருதி, மஹான், அஹங்காரம், மனம் ஆகிய உன்னுடைய பெரிய மாயையை மங்கச்செய்வாய்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT