நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல்  2

செ.குளோரியான்

பாடல்  2

மாயம் செய்யேல் என்னை, உன் திருமார்வத்து மாலை நங்கை
வாசம்செய் பூங்குழலாள் திரு ஆணை, நின் ஆணை கண்டாய்,
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய், என்னைக் கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ.

எம்பெருமானே, என்னிடம் மாயம் செய்யாதே, உன்னுடைய திருமார்பில் மாலைபோல் விளங்குகிற நங்கை, வாசனை நிறைந்த பூங்குழலைக்கொண்ட திருமகள்மீது ஆணை, உன்மீது ஆணை, என்னை நேசித்து, என்னுடைய உயிரை வேறோர் உயிராகக் கருதாமல், வெறுக்காமல் உன்னோடு என்னை ஒன்றாக ஏற்றுக்கொண்டாய், இங்கே வந்து என்னை உன்னோடு கூவி அழைத்துக்கொள், அடடா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT