சுவையான இளநீர் பொங்கல்
இந்த பொங்கலுக்கு ஸ்பெஷலா இளநீர் பொங்கல் செய்து பாருங்களேன்.
இளநீர் பொங்கல் செய்ய தேவையானவை:
பச்சரிசி - 1 கிண்ணம்
கசகசா - அரை கிண்ணம்
இளநீர் - 2 கிண்ணம்
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம் இளம் தேங்காய்த் துண்டுகள் - முக்கால் கிண்ணம், பொடித்த கற்கண்டு - அரை கிண்ணம்
செய்முறை:
கசகசாவை ஊற வைத்து மைய அரைக்கவும். பச்சரிசியுடன் இளநீர், தேங்காய்ப் பால் சேர்த்து குக்கரில் வேகவைத்து மசிக்கவும். பின்னர், பிரெஷர் பேனில் மாற்றி அத்துடன் அரைத்த கசகசா விழுது, பொடித்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய்த் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும். கசகசாவும், தேங்காய்ப் பாலும் சேர்ந்து அலாதி சுவையுடன் இருக்கும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.