கதம்ப காய்கறி கூட்டு
காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.
காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.
தேவையானவை:
கேரட், பீன்ஸ், அவரைக்காய், சேப்பக்கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - எலுமிச்சம்பழம் அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
Advertisement
Advertisement
செய்முறை:
அனைத்து காய்கறிகளையும் சற்று நீள நீளமாக நறுக்கி பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
பின் புளியைக் கரைத்துவிட்டு, சாம்பார் பொடியைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலை வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து காய்கறி கலவையுடன் சேர்க்கவும்.
நல்லெண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கூட்டுடன் கலந்து, ஒரு கொதிவிட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
- ராஜேஸ்வரி ரவிக்குமார்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.