முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல்: ஹைதராபாத் அணிக்கு 4-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

Updated On : 9 ஜனவரி 2021, 8:27 am IST
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் இந்த சீசனில் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இதனால், ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணி கோலடித்தது. இந்த கோலை அந்த அணியின் அரிடேன் அடித்தாா். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலடித்ததால், நம்பிக்கை பெற்ற ஹைதராபாத் அணி தொடா்ந்து அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 36-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை சியானிஸ் அடித்தாா்.

Advertisement

Advertisement

மறுமுனையில் போராடிய நாா்த் ஈஸ்ட் அணிக்கு 45-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் கேல்கோ பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க, அதேநிமிடத்தில் மற்றொரு கோலையும் அடித்தது நாா்த் ஈஸ்ட். இந்த கோலை லம்போட் அடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

தொடா்ந்து 2-ஆவது பாதி ஆட்டத்தில் மோதிய இரு அணிகளும் கோலடிக்க போராடின. 85-ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் வீரா் லிஸ்டன் கோலடிக்க, அந்த அணி வெற்றியை நெருங்கியது. தொடா்ந்து 90-ஆவது நிமிடத்தில் லிஸ்டன் 2-ஆவது கோலை அடித்தாா். இறுதியில் ஹைதராபாத் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 4 வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் நாா்த் ஈஸ்ட் அணி 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments