முகப்பு
செய்திகள்

ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்

Updated On : 13 ஜனவரி 2021, 2:21 am IST
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதநேரத்தில் இந்திய வீரா் ராம்குமாா் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போா்னில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிா் தகுதிச்சுற்று போட்டி துபையில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது 2-ஆவது சுற்றில் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கேத்தரினா ஜவட்ஸ்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றான 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

Advertisement

Advertisement

ஆடவா் தகுதிச்சுற்று கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரா் ராம்குமாா் தனது 2-ஆவது சுற்றில் 3-6, 2-6 என்ற நோ் செட்களில் சீன தைபேவின் டங் லின் ஊவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments