முகப்பு
விளையாட்டு

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது டிரா

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில்

Updated On : 2 மார்ச், 2013 at 2:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில் கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது முறையாக டிரா செய்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 4-வது சுற்றில் இத்தாலியின் ஃபேபியானோ கருணாவிடம் தோல்வி கண்ட ஆனந்த், இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இத்தாலியின் ஃபேபியானோ கருணா 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போரிஸ் கெல்பான்ட், முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆனந்த் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.