மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
போஃப் லிட்ச்ஃபீல்டு அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக போஃப் லிட்ச்ஃபீல்டு 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, எல்லிஸ் பெரி 36 ரன்களும், ஜார்ஜியா வேர்ஹம் 32 ரன்களும் எடுத்தனர். அன்னாபெல் சதர்லேண்ட் 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நடின் டி கிளர்க், நான்குலேகோ மிலாபா மற்றும் அயபோங்கா காகா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மாரிஸேன் காப் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.