முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

Updated On : 13 ஜூன் 2026, 9:12 pm IST
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
பகிர்:

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

மாநிலச் செயலகமான 'நபன்னா' வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதேசமயம் சந்திப்பு குறித்த விரிவான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எனினும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநருடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை சுவேந்து அதிகாரி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.

அதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Reserve Bank of India (RBI) Governor Sanjay Malhotra on Saturday met West Bengal Chief Minister Suvendu Adhikari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.