FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!

விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

Updated On : 18 ஜூலை 2026, 11:37 am IST
ஆர்பிஐ - கோப்புப் படம்
பகிர்:

பிளாஸ்டிக் போன்றதொரு, பாலிமர் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கும் முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. அதற்கான மூலப்பொருளை (சப்ஸ்ட்ரேட்) வழங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

சோதனை முயற்சியாக ரூ.10, ரூ.20 நோட்டுகளுடன் பாலிமர் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவிருப்பதாகவும், இது திட்டமிட்டபடி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் இவை படிப்படியாக அனைத்து ரூபாய் நோட்டுகளுக்கும் பரவலாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில், இந்தியாவில் ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, ரூபாய் நோட்டுகளை தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களைப் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

அனைத்து ரூபாய் நோட்டுகளும் பாலிமர் நோட்டுகளாக மாற்றப்படுமா என்பது குறித்து, 10, 20 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டு முடிவுகளைப் பொறுத்து அமையும் என்றும், முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், 2027-ஆம் ஆண்டில் முழு அளவில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் பாலிமராக மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Plastic currency notes coming soon to the country! RBI's plan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments