டெஸ்ட்: 175 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 60.5
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 60.5 ஓவர்களில் 175 ரன்களுக்கு சுருண்டது.
மேற்கிந்தியத் தீவுகளின் டொமினிகாவில் புதன்கிழமை தொடங்கிய இப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெய்லர் 33, சிபாண்டா 32, வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தனர்.
Advertisement
Advertisement
மற்ற வீரர்கள் விரைவாக வெளியேற அந்த அணி 175 ரன்களில் சுருண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷில்லிங்ஃபோர்டு 5 விக்கெட்டுகளையும், மார்லான் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மேற்கிந்தியத் தீவுகள்-181/4 இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
சந்தர்பால் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக கிறிஸ் கெயில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.