பிரேசில் ஓபன்: செளம்யஜித், மணிக்கா பத்ரா சாம்பியன்
பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்ஜியத் கோஷ், மணிக்கா பத்ரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM
பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்ஜியத் கோஷ், மணிக்கா பத்ரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
ஐடிடிஎஃப் உலக டூர் பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பிரேசிலின் சான்டாஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 21 வயதுக்குபட்டோருக்கான ஒற்றையர் இறுதிச்சுற்றில் செüம்ஜித் கோஷ் 8-11, 6-11, 11-7, 11-6, 9-11, 11-7, 11-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெஞ்சமின் பிராஸியரை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
மகளிர் 21 வயதுக்குபட்டோருக்கான ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா 11-5, 9-11, 12-10, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் பிரேசிலின் கரோலினை வீழ்த்தினார்.
Advertisement