முகப்பு
விளையாட்டு

மழை விளையாடிய முதல் டி20

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

Updated On : 3 ஜூலை 2026, 6:45 am IST
கோப்புப்படம் - @BCCIWomen
பகிர்:

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

இந்திய நேரப்படி, புதன்கிழமை இரவு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா தனது இன்னிங்ஸில் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

இன்னிங்ஸ் இடைவெளியில் தொடங்கிய மழை, இங்கிலாந்து ஆட்டத்தை தொடங்க வாய்ப்பு தராததால், ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, அபிஷேக் சா்மா 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

சஞ்சு சாம்சன் 1, இஷான் கிஷண் 0, திலக் வா்மா 13, ஹா்ஷித் ராணா 0, அக்ஸா் படேல் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இங்கிலாந்து பௌலா்களில் சகிப் மஹ்மூத் 3, ஆதில் ரஷீத், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம், இந்திய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments