முகப்பு
கிரிக்கெட்

சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!

ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டஸின் சுவாரசியமான கதை...

Updated On : 26 டிசம்பர் 2024, 3:59 pm IST
சாம் கான்ஸ்டஸ் - படம்; ஏபி
பகிர்:

மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட்டில் அறிமுகமான ஆஸ்திரேலிய இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

உலகின் நம்.1 வீரரான பும்ராவின் ஓவரில் அதிரடியாக விளையாடி 16 ரன்கள், 18 ரன்கள் என அடுத்தடுத்த ஓவர்களில் ரன்கள் அடித்து கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தினார்.

அவரது மனப்பான்மை, அதிரடியாக பயமில்லாமல் விளையாடிய விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

65 பந்துகளில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்த சாம் கான்ஸ்டாஸின் தந்தை அவருக்கு சிறு வயதிலேயே வேகப் பந்துகளை அடிக்கும் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து சாம் கான்ஸ்டாஸின் சகோதரர் பில்லி கூறியதாவது:

சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்களது தந்தை பௌலிங் எந்திரத்தினுடன் அழைத்து சென்றார். 90 மைல்/மணி வேகத்தில் பந்தினை எறிந்தார். நான் அது ஏதோ 90 கி.மீ/ மணி என நினைத்திருந்தேன்.

எனது தந்தை பௌலிங் எந்திரத்தின்மூலம் பந்தை வீசும்போது கான்ஸ்டாஸ் அதை நடு பேட்டில் நேராக அடித்தார்.

5 அல்லது 6 வயதிலிருந்து ஆஸி. அணிக்காக விளையாடுவது கா ன்ஸ்டாஸுக்கு கனவாக இருப்பதாக நினைக்கிறேன். எங்களது குடும்பத்திலுள்ள அனைவருக்குமே இது கனவு நனவானது மாதிரிதான். நாங்கள் ஆடுகளத்தில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி.

கனவு நனவானது

நான் ஒரு பிசியோதெரபிஸ்ட். என்னிடம் கொன்ஸ்டாஸ், ‘பில்லி எனக்கு மசாஜ் கிடைக்குமா?’ எனக் கேட்டார். நாளைக்கு எவ்வளவு ரன்களை அடிப்பய் என நான் கேட்டேன். அதற்கு கான்ஸ்டாஸ் ‘கவலைப்படாதே, குறைவான ரன்கள் மட்டுமே அடிப்பேன்’ என்றார். இளம் வயதில் இவ்வளவு ரிலாக்ஸாக இருக்கிறார்.

குடும்பமாக எங்களுக்கு நம்பமுடியாத அனுபவம். ஆடுகளத்தில் நடந்துவரும்போது எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதயம் சற்று வேகமாக துடித்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments