ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் உலகக் கோப்பையை வென்ற கேப்டனுமான ரிக்கி பாண்டிங் 2025 முதல் 2028வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
168 டெஸ்டில் 13,378 ரன்கள், 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ரன்கள், 10 ஐபிஎல் போட்டிகளில் 91 ரன்களும் எடுத்துள்ளார். 2013 உடன் அனைத்து போட்டிகளிலும் ஓய்வுபெற்று பயிற்சியாளர், வர்ணனையாளர் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தில்லி அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார். கடந்த 8 சீசன்களில் பஞ்சாப் அணிக்கு இது 6ஆவது பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பிரிங் பேட், உலகக் கோப்பை, பாண்டிங்கின் பேட்டினை பதிவிட்டுள்ளார்கள்.
ரிக்கி பாண்டிங் பேட்டிங் விளையாடும்போது அவரது பேட்டில் ஸ்பிரிங் இருப்பதாக 1990களில் இந்தியாவில் வதந்திகள் கிளம்பின. அதனை நினைவுப்படுத்தும் விதமாக பஞ்சாப் அணி பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.