இன்று ஓய்வு பெறுகிறாரா எம்.எஸ்.தோனி?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா என்பது குறித்து...
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இன்றுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (மே 18) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தோனி விளையாடவுள்ளதாகவும், இதுவே ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் கடைசி போட்டி எனவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக செய்திகள் பரவி வருகின்றன.
இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.