நம்பிக்கை, அதீத நம்பிக்கை... டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை!
டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை குறித்து...
முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி தற்போதைய வீரர் டெவால்டு பிரெவிஸுக்கு நம்பிக்கை, அதீத நம்பிக்கை குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த சீசனில், மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்டு பிரெவிஸ் (23 வயது) முக்கியமான மிடில் ஆர்டர் பேட்டராக மாறியுள்ளார்.
கடந்த சீசனில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய அவர் 225 ரன்கள் குவித்தார். 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 37.50 சராசரியுடன் விளையாடியிருந்தார். தற்போதைய சீசனில் கடைசி ஆட்டத்தைத் தவிர மற்ற போட்டிகளில் மோசமாகவே விளையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
சிஎஸ்கே அணி கிட்டதட்ட பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா தோல்வியுற்று சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் வென்றால், ஒரு வாய்ப்பிருக்கிறது.
சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் குஜராத்தை எதிர்த்து நாளை (மே.21) விளையாடவிருக்கிறது. இந்த நிலையில், ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் டெவால்டு பிரெவிஸ் தோனி குறித்து கூறியிருப்பதாவது:
எனது முதலாமாண்டு ஐபிஎல் போட்டியின்போது நான் அப்போது சென்னை அணியில் இல்ல்லாதபோது எம்.எஸ். தோனி எனக்கு மிகச்சிறந்த அறிவுரை ஒன்றை வழங்கினார். ’உனக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று அதீத நம்பிக்கை, மற்றொன்று நம்பிக்கை. அதில் நீ அதிகமாக நம்பிக்கையின் பக்கம் இருக்க வேண்டும்’ எனக் கூறினார். அந்த அறிவுரை எனக்கு மனதில் அப்படியே தங்கிவிட்டது என பிரெவிஸ் கூறினார்.
பேட்டிங்கில் சரியாக விளையாடாவிட்டாலும் ஃபீல்டிங்கில் அதிகமான கேட்ச்சுகளை எடுத்து பிரெவிஸ் அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.