தோனி சொன்னதும் செய்ததும்... சிரிப்பலையை ஏற்படுத்தும் ஷேன் வாட்சன் விடியோ!
முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து ஷேன் வாட்சனின் வைரல் விடியோ குறித்து...
முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து ஷேன் வாட்சன் கூறியிருந்தது சமூக வலைதளத்தில் மீண்டும் டிரெண்டாகி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தேர்வாகாமல் வெளியேறியது. கடந்த மூன்று சீசன்களாகவே சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்பாகவே வெளியேறியது.
இதுவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணியில் 2018 முதல் 2020 வரை விளையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
சிஎஸ்கே அணி 2018ல் கோப்பை வெல்ல ஷேன் வாட்சன் முக்கியமான காரணமாக இருந்துள்ளார். 2019 சீசனில் நடந்தது குறித்து ஷேன் வாட்சன் 2024ல் கூறியிருந்ததாவது:
நான் சிஎஸ்கேவில் சேர்ந்தபோது, எங்களது முதல் சந்திப்பில் எம்.எஸ். தோனி ‘நாம் ஐபிஎல் கோப்பை, ஃபேர் பிளே விருது இரண்டையும் பெற வேண்டும். நாம் ஃபேர் பிளே விருது வாங்குவது கடினம். ஏனெனில், நமது அணியில் ஆஸ்திரேலிய வீரர் வாட்டோ (வாட்சன்) இருக்கிறார்’ எனக் கூறினார். ஆனால், கடைசியில் தோனியே ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்தார் என வாட்சன் கூறியது இணையத்தில் மீண்டும் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் தோனி நடுவர்களுடன் விவாதம் செய்ய ஆடுகளத்தில் நுழைவார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Shane Watson on MS Dhoni invade of cricket ground and fair play award
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.