முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் - படம் | ANI
பகிர்:

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட் செய்கிறது.

Advertisement

Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மார்கோ யான்சென் மற்றும் விஜயகுமார் வைஷாக் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்குகிறது. இன்றையப் போட்டியில் தோல்வியடைந்தால், பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறிவிடும்.

summary

In the IPL match against the Lucknow Super Giants, the Punjab Kings won the toss and elected to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.