முகப்பு
கிரிக்கெட்

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை படைத்துள்ளார்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (மே 15) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 2808 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 22 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.

Advertisement

Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசி இரண்டு மிக முக்கியமான லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்த்து சிஎஸ்கே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Chennai Super Kings captain Ruturaj Gaikwad has set a new record in the IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments