கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தது. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடர் நான்கு நகரங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: ஐசிசியின் படிநிலை 1, படிநிலை 3 அல்லது படிநிலை 3 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்படும் அபராதங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பின்பற்றப்படும். இதுவரை ஐபிஎல் தொடரில் அதற்கென தனியாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளின் விதிமுறைகளை ஐபிஎல் தொடரிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடர் லக்னௌ, மும்பை, பரோடா மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT