முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்!

இந்திய மகளிரணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் விலகியுள்ளார்.

Updated On : 5 ஜூலை 2025, 4:26 pm IST
- படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

இந்திய மகளிரணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.

இந்திய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

Advertisement

Advertisement

இங்கிலாந்து கேப்டன் விலகல்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காயம் காரணமாக டி20 தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.

மூன்றாவது டி20 போட்டியில் அணியை வழிநடத்திய டம்மி பியூமாண்ட், மீதமுள்ள போட்டிகளிலும் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள நாட் ஷிவர் பிரண்ட்டுக்குப் பதிலாக மையா பௌச்சியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ள டி20 போட்டிகளிலிருந்து நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தயாராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16 முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

The England women's captain has ruled out from the T20 series against the Indian women's team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments