ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம்: அமன்ஜோத் கௌர்
ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்ததாக இந்திய அணி வீராங்கனை அமன்ஜோத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்ததாக இந்திய அணி வீராங்கனை அமன்ஜோத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதிப் போட்டிகள் நிறைவடைந்தன. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
நேற்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27.2 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. இதனால், பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலிய அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்ததாக இந்திய அணியின் அமன்ஜோத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிப்பதைத் தடுக்க என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன். ஃபோப் லிட்ச்ஃபீல்டு மிகவும் ஆக்ரோஷமான பேட்டர். அவருக்கு சில டாட் பந்துகளை வீசினால், வேறு ஏதேனும் வித்தியாசமான ஷாட் விளையாட முயற்சி செய்வார் எனத் தெரியும். அதன் காரணமாகவே நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீச முயற்சி செய்தேன்.
ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் நன்றாக இருந்ததால், ஆஸ்திரேலிய அணி 380 ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், லிட்ச்ஃபீல்டு விக்கெட்டினை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணியை அதிக ரன்கள் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்த உதவியது. ஸ்ரீ சரணி மிகவும் நன்றாக பந்து வீசினார் என்றார்.
அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 2) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian team player Amanjot Kaur said that she expected Australia to set a target of 380 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.