ஐபிஎல் தொடரிலிருந்து கலீல் அகமது விலகல்..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
சிஎஸ்கே வீரர் கலீல் அகமது காயம் காரணமாக விலகுவது குறித்து...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது (28 வயது), காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தொடையின் தசைநாரில் ஏற்பட்ட காயத்தினால் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர்சில் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான பவர்பிளே பந்துவீச்சாளராக கலீல் அகமது இருந்து வந்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக ஏப்.14ஆம் தேதி நடந்த போட்டியில் 19ஆவது ஓவரில் அவர் பந்துவீச ஓடிவரும்போது காயம் ஏற்பட்டது.
Advertisement
தொடை தசையில் காயம் காரணத்தினால் போட்டியிலிருந்து வெளியேறினார். லெவல் 2 காயம் என்பதால் இதிலிருந்து குணமாக, 10 - 12 வாரங்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக 11 ஒருநாள், 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கலீல் அகமது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக, 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். குறிப்பாக 50 டாட் பந்துகளை வீசி அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.