முகப்பு
கிரிக்கெட்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 19 ஏப்ரல் 2026, 9:49 pm IST
பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்கள் விளாசி 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும். கூப்பர் கானலி 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29 ரன்களும், ஷஷாங் சிங் 17 ரன்களும் எடுத்தனர்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷமி மற்றும் மோஷின் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

In the IPL match against the Lucknow Super Giants, the Punjab Kings, batting first, scored 254 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.