முகப்பு
கிரிக்கெட்

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 242 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:54 PM
சதம் விளாசிய மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:44 PM

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 242 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் விளையாடியது.

Advertisement

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:46 PM

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 68 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 37 ரன்களும், கேப்டன் இஷான் கிஷன் 25 ரன்களும் எடுத்தனர்.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் கேப்டன் அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the IPL match against the Delhi Capitals, Sunrisers Hyderabad has scored 242 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.