கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!
நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த தில்லி கேபிடல்ஸ் அணியின் அதிரடியான பேட்டிங் குறித்து...
நடப்பு ஐபிஎல் சீசனில் 35ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 264/2 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த அணியாக தில்லி கேபிடல்ஸ் சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 67 பந்துகளில் 152* ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடித்தார்.
தில்லி அணி தனது சொந்த திடலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பதும் நிசாங்கா 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து கே.எல். ராகுல் - நிதீஷ் ராணா இணையினர் 220 ரன்கள் குவித்தார்கள்.
Advertisement
இந்தப் போட்டியில் நிதீஷ் ராணா 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறத்தில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி 152 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி வீரர்களின் பந்துவீச்சை ராகுல் நான்கு பக்கமும் அடித்து நொறுக்கினார்.
பஞ்சாப் அணியின் சார்பில் அர்ஷ்தீப், பார்ட்லெட் தலா 1 விக்கெட் எடுத்தார்கள். சஹால் மட்டுமே 10.5 ரன்ரேட் அளித்தார். மற்றவர்கள் எல்லாம் 11, 12, 16 என ரன் ரேட்டில் பந்துவீசி அதிர்ச்சி அளித்தார்கள்.