முகப்பு
கிரிக்கெட்

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

தில்லி கேபிடல்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் வீரர்கள் - படம் | AP
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடித்தபோதிலும், மற்ற அணிகளின் முடிவுகள் தில்லி கேபிடல்ஸுக்கு சாதகமாக அமையாததால் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துடன் நிறைவு செய்தது.

Advertisement

Advertisement

தில்லி கேபிடல்ஸ் அணி சில போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைத் தழுவியது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரானப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் தோல்வியடைந்தது. அதேபோல, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் எடுத்தும் தில்லி கேபிடல்ஸால் வெற்றி பெற முடியவில்லை. ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பல போட்டிகள் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கலாம் அல்லது அமையாமலும் சென்றிருக்கலாம். ஆனால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் பல போட்டிகளில் அந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தோம். சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கேட்ச்சுகளை தவறவிட்டதால் தோல்வியடைந்தோம். முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்றார்.

summary

Delhi Capitals Head Coach Hemang Badani has explained the reason why the team failed to advance to the playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.