பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறின.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹார்திக் பாண்டியா 34 ரன்களும், வில் ஜாக்ஸ் 33 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நண்ட்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா மற்றும் யஷ் ராஜ் புஞ்சா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற மே 27 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Rajasthan Royals defeated Mumbai Indians in the IPL tournament to advance to the playoffs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.