மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர்!

ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளார்.

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம் | ANI

Updated On :23 மே 2026, 7:38 pm IST

ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துளியும் அச்சமின்றி அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 579 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதால், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில், அதிரடியாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கட்டுப்படுத்த எங்களிடம் சில வழிகள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அறிமுக சீசனில் சிறப்பாக விளையாடியது போன்று, இரண்டாவது சீசனிலும் அதிரடியாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு நாளும் அவருடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். ஆட்டம் குறித்த புரிதலை அவர் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறார். அவரது விக்கெட்டினை வீழ்த்த எங்களிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. அதனை சரியாக செயல்படுத்தினால், அவரது விக்கெட்டினை சீக்கிரமாகவே கைப்பற்றுவோம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்பைக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Mumbai Indians Head Coach Mahela Jayawardene has praised young player Vaibhav Suryavanshi, who has been displaying explosive form in the IPL tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.