முகப்பு
கிரிக்கெட்

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாபர் அசாமின் அணி குறித்து...

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:56 PM
பாபர் அசாம், பெஷாவர் அணியினர். - படங்கள்: ஏஎஃப்பி
பகிர்:

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் பாபர் அசாமின் பெஷாவர் ஜல்மி அணி ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

பிஎஸ்எல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஜல்மி 20 ஓவர்களில் 221/7 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் பெஷாவர் ஜல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் 18.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

இந்தப் போட்டியில் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த சீசனில் இது அவருக்கு இரண்டாவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலமாக பெஷாவர் ஜல்மி அணி ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக சாதனை படைத்துள்ளது.

முன்னதாக, லாகூர் கலந்தர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் நான்கு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

summary

Babar Azam second century and his Peshawar Zalmi team qualify to Final in PSL

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.