எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
இந்த சீசனில் முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பேசியிருப்பதாவது...
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் தோல்வியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சந்தித்துள்ளது. இது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “எங்களது திட்டங்களைச் சரியாக செய்து முடிக்கவில்லை” எனக் கூறினார்.
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 228/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டர் டோனவன் ஃபெரேரா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த சீசனில் முதல் தோல்வியைச் சந்தித்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியிருப்பதாவது:
Advertisement
224 ரன்கள் என்பது மிகவும் அற்பிதமான இலக்கு என நினைக்கிறேன். இந்த மாதிரியான மெதுவான, கணிக்க முடியாத ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடிய பேட்டர்களுக்கு வாழ்த்துகள்.
நாங்கள் பந்துவீச்சில் சிறிது பின் தங்கிவிட்டோம். நினைத்ததை சரியாக செய்ய முடியவில்லை என நினைக்கிறேன். அதிகமாக வேகமில்லாத மெதுவான பந்துகள், யார்க்கர்கள் வீச நினைத்தோம். அதில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என நினைக்கிறேன்.
ராஜஸ்தான் அணியினர் மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடினார்கள். குறிப்பாக, டோனவன் ஃபெரேரா, ஷுபம் துபே முக்கியமான ரன்களை இறுதி நேரத்தில் அடித்து அசத்தினார்கள்.
டி20யில் பேட்டர்கள் முதல் பந்தில் இருந்தே அடிக்க வருவார்கள். அதனால், பந்துவீச்சாளர்கள் முன்கூட்டியே திட்டங்களுடன் வரும் அளவுக்கு அதிகமான வேலை இருக்கிறது.
இறுதியில் நமது திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். அதைச் செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இன்று எங்களுக்கான நாளாக அமையவில்லை என்றார்.