ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே எச்சரித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே எச்சரித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இந்திய அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதன் வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், ஜிம்பாப்வே அணி மிகவும் சவாலளிக்கும் விதமாக விளையாடக் கூடிய எதிரணி. அவர்களது திறமை மதிக்கப்பட வேண்டும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர்கள் மிகவும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை அவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே 179 ரன்களை துரத்திப் பிடித்து அபார வெற்றி பெற்றனர். அந்த அணியின் டாப் 4 பேட்டர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். பிளெஸ்ஸிங் முசராபானி, பிராட் ஈவன்ஸ் போன்ற உயரமான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். அவர்கள் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, பவர்பிளேவில் அவர்கள் மிகவும் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள்.
இந்திய அணி ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய அணி அவர்களது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீரரும் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். அடுத்த பேட்டர் அடிப்பார்கள் என நினைக்காமல் ஒவ்வொருவரும் நன்றாக விளையாட வேண்டும். இந்திய அணிக்கு சாதகமாக முடிவு அமையும் என நம்புகிறேன். இந்திய அணி மிகவும் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.
Former Indian captain Anil Kumble has warned the Indian team not to take the match against Zimbabwe lightly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.