டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று (ஜூன் 8) இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பார்தி ஃபுல்மாலி 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா 39 ரன்கள், யஷ்திகா பாட்டியா 36 ரன்கள், ஷஃபாலி வர்மா 29 ரன்கள் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் எஃபி பிளெட்ச்சர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கரிஷ்மா, ஆலியா மற்றும் டீண்ட்ரா டாட்டின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஷ்ரேயங்கா பாட்டில், ராதா யாதவ் அசத்தல்; இந்தியா வெற்றி!
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக டீண்ட்ரா டாட்டின் 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். ஷிமைன் கேம்பெல் 25 ரன்கள், ஜெனிலா கிளாஸ்கோ மற்றும் ஷானிஷா ஹெக்டார் தலா 19 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.